"உன்னை யொழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை யொருவருவரை யான் பின்செல்வேன் - பன்னிருகைக் கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்தில் வால்வே . "
பஞ்ச பட்சிகள் குறித்து ஓர் விளக்கம்
"பஞ்ச பட்சிகள்" என்றால் ஐந்து பட்சிகள் எனப் பொருள்படும். அவை வல்லூறு, ஆந்தை, காகம்,கோழி.மயில் என்பனவாகும்.
வல்லூறு |
 |
|
| "வல்லூறு" என்பது வானில் பறக்கும் ஓர் இன்ப்பறவையாகும்.இதன் இன்மான கருடன் திருமால் வாகனமாகும். |
ஆந்தை |
 |
|
| "ஆந்தை" என்ற பறவையை வடநாட்டில் திருமால் இருப்பிட்மாக மதித்துப் போற்றி வருகின்றர். |
காகம் |
 |
|
| "காகம்" என்பது சனீஸவரனின் வாகனம் என இந்துக்கள் போற்றி வணங்குகின்றனர். |
கோழி |
 |
|
| "கோழி" என்பது முருக பெருமானின் கொடியில் உள்ளதாகும்."செவப் கொடியோன்" எனத் தமிழ் மக்கள் முருகப் பெருமானை போற்றி வணங்குகின்றனர். |
மயில் |
 |
|
| "மயில்" என்பது முருகப் பெருமானின் வாகனமாகும். |
மேற்கூறிய ஜந்து வகையான பறவைகளைக் கொண்டு நமது முன்னோர்கள் இந்தப பஞ்ச பட்சி சாஸ்திரத்தை உருவாக்கியுள்ளனர் என்பது குற்ப்பிடத்தக்கது.
ஒவொருவரின் பிறந்த நட்சத்திரப்படி ஒவ்வொரு நாளிலும் அவருக்கு உகந்த நேரத்தை அறிவதற்கான கணிதம் இது! 'அரசு' 'ஊண்' நேரம் நடக்கும் பொழுதில் செயலாற்றினால் வெற்றி நிச்சயம்! மற்ற நேரம் பகுதிகளை விலக்கிட வேண்டும். ஏழு நாட்களிலும் பகல் நேர ஐந்து பகுதிகள்,இரவு நேர பகுதிகளை அட்டவணையாக தயாரித்து வைத்துக் கொண்டு மிகுந்த பயன் பெறலாம்!
அதாவது ஜோதிடம் ,கைரகை, அகஸ்தியர் ஆருடம்,சகாதேவர் ஆருடம்,பிரசன்னம்,பல்லி சாஸ்திரம்,அங்க சாஸ்திரம்,தேங்காய் ஜோதிடம்,சீதை,ராமர் சக்கரம்,வெற்றிலை பாக்கு ஜோதிடம்,வாக்கு கேட்டல் போன்ற பலவிதமான சாஸ்திரங்கள் நமக்குத் தெளிவக தந்து சென்றுள்ளனர்!
மேற்கூறிய சாஸ்திரங்களில் மிகவும் சிறந்தது ஜோதிடக் கலையாகும். அடுத்து,கை ரேகை சாஸ்திரம் ஆகும். மற்றதெல்லாம் ஆருட சாஸ்திரம் போல் கூறப்பட்டுள்ளது! மேற்கூறிய சாஸ்திரங்கள் போக,பஞ்ச சாஸ்திரம் என்றொரு கனிதத்தையும் நன்றாக ஆராய்ச்சி செய்து நமக்குத் தந்து சென்றுள்ளனர்.
இதை "புள்ளியல் சாஸ்திரம்" என்றும் கூருவது உண்டு.வல்லூறு, ஆந்தை, , காகம் ,கோழி ,மயில் 5 பட்சிகள் ஒவ்வொரு நாளும் தங்களது தொழிலை ஒழுங்காக செய்து வருகின்றன.ஒரு மனிதன் பிறந்த நட்சத்திரத்தை வைத்து,அவனுடைய பட்சி என்ன என்று தீர்மானிக்கப்படுகின்றது.
ஒரு மனிதனது பட்சி அரசு ,ஊண் தொழிலை செய்து கொண்டிருக்கும் காலத்தில் அவன் எடுக்கும் முயற்சில் யாவும் வெற்றியில் முடியும்.
துயில், சாவு தொழிலை செய்யும் பொழுது அவனுடைய முயற்சிகள் தோல்வியில் முடியும்.
"நடை" தொழிலை செய்யும் பொழுது அவனுடைய முயற்சி இழுபறியாக இருக்கும் என அறிய வேண்டும்.
பொதுவக, "பஞ்ச பட்சி சாஸ்ததிரம் " நல்ல காரியம் ஆரம்பிக்கும், வீடு கட்டுவதற்கும்,கிரகபிரவேசத்திற்கு நல்ல நாள் குறிக்கும்போது பேருதவியாக இருக்கும் எனலாம்.
ஜோதிட சாஸ்திரத்தில் உள்ளது போலவே, இந்த சாஸ்திரத்திற்கும் திச-புத்தி-அந்திர காலங்கள் குறிக்கப்பட்டுள்ளன.ஆனால் ஜாதகப்பலன் அளவிற்கு இந்து சாஸ்திரம் வேலை செய்யாது என்பதை வாசகர்கள் உணர வேண்டும்.அதாவது,ஒருவருக்கும திசா புத்திகள் நல்லபடியாக அமைந்து, பட்சி சாஸ்திரம் திசா-புத்தி சாவு-துயிலாக இருந்தால்,அவரது வாழ்க்கையில் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படாது! அதே சமயம் பட்சி சாஸ்திர - புத்திகள் அரஇ ஊணாக இருந்தால், அவரது வாழ்வில் மிகவும் சிறப்பான நல்ல பலங்கள் நடைபெறும் என்பது எமது ஆய்வில் உண்மையாகும்.
அகஸ்தியர், உரோம ரிஷி,கும்பமுனி,காகபுசுண்டர்,போகர் போன்ற பல ரிஷிகள் "பஞ்ச பட்சி சாஸ்திரத்தை" தங்களது சுவடி வாயிலாக வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தகிகது!
மேலும், "திருடு போன பொருள் கிடைக்குமா? காணாமல் போன மாடு திரும்பி வருமா? காணா போன பையன் திரும்பி வருவானா?" போன்ற ஆருடம் சம்பந்தமான கேள்விகளுக்கும் இந்த சாஸ்திரம் பெரிதும் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நட்சத்திரத்திற்குரிய பட்சிகள்:
அசுவனி, பரனி, கிருத்திகை,ரோகிணி, மிருகசீரிடம் ஆகிய ஐந்து ந்ட்சத்திரத்திற்கும் பட்சி வல்லூறு, திருவாதிரை, புனர்பூசம்,பூசம்,ஆயில்யம்,மகம்,பூரம் ஆகிய ஆறு ந்ட்சத்திரத்திற்கும் பட்சி ஆந்தை ,உத்திராடம் ,அஸ்தம், சித்திரை,சிவாதி, விசாகம் ஆகிய ஐந்து நட்சத்திரத்திற்கும் பட்சி காகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் ஆகிய ஐந்து நட்சத்திரத்திற்கும் பட்சிகோழி, திருவோணம்,அவிட்டம்,சதயம்,பூரட்டாதி,உத்திரட்டாதி,ரேவதி ஆகிய ஆறு நட்சத்திரத்திற்கும் பட்சி மயில். இதை ஜென்ம நட்சத்திரத்தைக் கொண்டு பார்க்க வேண்டும். ஜென்ம நட்சத்திரம் தெரியாதவர்கள் பெய்ரின் முதல் எழுத்துப்படி அறிய வேண்டும்.
வளர்பிறை பட்சி | நட்சத்திரம் | தேய்பிறை பட்சி |
வல்லுறு | அக்வனி, பரணி, கிருத்தி, ரோஹி, மிருகசிரிஷ் | மயில் |
ஆந்தை | திருவாதி, புளர்பூச, பூசம், ஆயில்ய, மகம், பூரம் | கோழி |
காகம் | உத்திரம், அஸதம்,சித்திரை,சுவாதி, விசாகம் | காகம் |
கோழி | அனுஷம்,கேட்டை,மூலம்,பூராட்ம்,உத்ராடம் | ஆந்தை |
மயில் | திருஓண, அவிட்ட, சதயம்,பூரட், உத்திரட், ரேவ., | வல்லுறு |
ஒவ்வொரு கிழமையிலும் படுபட்சிகள் வெவ்வேறாக இருக்கும்.அத்துடன் வளர்பிறைக்கும் தேற்பிறைக்கும் கூட வித்தியாசமாக இருக்கும்.அவை வருமாறு :
நட்சத்திரத்திற்குரிய படுபட்சியுள்ள நாள்களில் பிரயாணம் செல்வது சுப காரியங்கள் செய்வது போன்றவைற்றை விலகுவது நல்லது.
ஓரையின் காலங்கள் :
நேரம்
|
ஞாயிறு
|
திங்கள்
|
செவ்வாய்
|
புதன்
|
வியாழன்
|
வெள்ளி
|
சனி
|
பகல்
6-7
|
சூரியன்
|
சந்திரன்
|
செவ்வாய்
|
புதன்
|
குரு
|
சுக்கிரன்
|
சனி
|
7-8
|
சுக்கிரன்
|
சனி
|
சூரியன்
|
சந்திரன்
|
செவ்வாய்
|
புதன்
|
குரு
|
8-9
|
புதன்
|
குரு
|
சுக்கிரன்
|
சனி
|
சூரியன்
|
சந்திரன்
|
செவ்வாய்
|
9-10
|
சந்திரன்
|
செவ்வாய்
|
புதன்
|
குரு
|
சுக்கிரன்
|
சனி
|
சூரியன்
|
10-11
|
சனி
|
சூரியன்
|
சந்திரன்
|
செவ்வாய்
|
புதன்
|
குரு
|
சுக்கிரன்
|
11-12
|
குரு
|
சுக்கிரன்
|
சனி
|
சூரியன்
|
சந்திரன்
|
செவ்வாய்
|
புதன்
|
12-1
|
செவ்வாய்
|
புதன்
|
குரு
|
சுக்கிரன்
|
சனி
|
சூரியன்
|
சந்திரன்
|
1-2
|
சூரியன்
|
சந்திரன்
|
செவ்வாய்
|
புதன்
|
குரு
|
சுக்கிரன்
|
சனி
|
2-3
|
சுக்கிரன்
|
சனி
|
சூரியன்
|
சந்திரன்
|
செவ்வாய்
|
புதன்
|
குரு
|
3-4
|
புதன்
|
குரு
|
சுக்கிரன்
|
சனி
|
சூரியன்
|
சந்திரன்
|
செவ்வாய்
|
4-5
|
சந்திரன்
|
செவ்வாய்
|
புதன்
|
குரு
|
சுக்கிரன்
|
சனி
|
சூரியன்
|
5-6
|
சனி
|
சூரியன்
|
சந்திரன்
|
செவ்வாய்
|
புதன்
|
குரு
|
சுக்கிரன்
|
இரவு
6-7
|
குரு
|
சுக்கிரன்
|
சனி
|
சூரியன்
|
சந்திரன்
|
செவ்வாய்
|
புதன்
|
7-8
|
செவ்வாய்
|
புதன்
|
குரு
|
சுக்கிரன்
|
சனி
|
சூரியன்
|
சந்திரன்
|
8-9
|
சூரியன்
|
சந்திரன்
|
செவ்வாய்
|
புதன்
|
குரு
|
சுக்கிரன்
|
சனி
|
9-10
|
சுக்கிரன்
|
சனி
|
சூரியன்
|
சந்திரன்
|
செவ்வாய்
|
புதன்
|
குரு
|
10-11
|
புதன்
|
குரு
|
சுக்கிரன்
|
சனி
|
சூரியன்
|
சந்திரன்
|
செவ்வாய்
|
11-12
|
சந்திரன்
|
செவ்வாய்
|
புதன்
|
குரு
|
சுக்கிரன்
|
சனி
|
சூரியன்
|
12-1
|
சனி
|
சூரியன்
|
சந்திரன்
|
செவ்வாய்
|
புதன்
|
குரு
|
சுக்கிரன்
|
1-2
|
குரு
|
சுக்கிரன்
|
சனி
|
சூரியன்
|
சந்திரன்
|
செவ்வாய்
|
புதன்
|
2-3
|
செவ்வாய்
|
புதன்
|
குரு
|
சுக்கிரன்
|
சனி
|
சூரியன்
|
சந்திரன்
|
3-4
|
சூரியன்
|
சந்திரன்
|
செவ்வாய்
|
புதன்
|
குரு
|
சுக்கிரன்
|
சனி
|
4-5
|
சுக்கிரன்
|
சனி
|
சூரியன்
|
சந்திரன்
|
செவ்வாய்
|
புதன்
|
குரு
|
5-6
|
புதன்
|
குரு
|
சுக்கிரன்
|
சனி
|
சூரியன்
|
சந்திரன்
|
செவ்வாய்
|
இந்த ஒரைகளில் சந்திரன், புதன், குரு, சுக்கிர ஓரைகள் சுபமானவை. நல்லது செய்ய உகந்தவை. சூரியன், செவ்வாய், சனி ஓரைகள் நல்லவை அல்ல.
சூரிய ஓரை : இந்த நேரத்தில் புதிதாக எந்த அலுவல்களையோ உடன் பாடுகளையோ செய்வது நல்லதல்ல, சுபகாரியங்கள் செய்யயவும் இந்த ஓரை ஏற்றதல்ல. இந்த ஓரை நடக்கும் நேரத்தில் பொருள் ஏதேனும் காணாமல் போனால் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைக்குமானால் மிகவும் தாமதித்து அப்பொருளின் நினைவு மறைந்தபின் கிழக்கு திசையில் கிடைக்கலாம்.இந்த நேரத்தில் உயில் சாசனம் எழு,பெரியோர்களைஸ் சந்திக்க நல்லது.
சந்திர ஓரை : இந்த ஓரை காலத்தில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம்.குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட காரியங்களையும் மிகவும் ஏற்றது. வியாபார விஷயமாகவோ அல்லது புனித யாத்திரையாகவோ பயணம் செய்ய ஏற்றது.பிறரைச் சந்தித்துப் பேசவும் செய்யலாம். இந்த ஓரையில் எந்தப்பொருள் காணாமல் போனாலும் கிடைக்காது.
செவ்வாய் ஓரை : எந்தவித நல்ல காரியங்களும் செய்ய உகந்த நேரமல்ல. இருப்பினும் தெய்வீகத் தொடர்பான விஷய்ங்களையோ, சண்டை சச்சரவுக்கான் விஷயங்களையோ பற்றிய் பேசலாம். இருப்பினும் இந்த ஓரையை தவிர்ப்பது நல்லது. இந்த ஓரை நேரத்தில் பொருள்கள் காணாமல் போனால் உடனே முயன்றால் தெற்கு திசையில் கிடைத்துவிடும்.தாமதித்தால் கிடைக்காது.
புதன் ஓரை : கல்வி மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும் ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம். சுப காரியங்கள் செய்யலாம். நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும் இந்த நேர உகந்தது. பயணங்கள் மேற்கொள்ளவும் செய்யலாம்.இந்த ஓரையில் காணாமல் போகும் விரைவில் அதிக சிரமமின்றி கிடைத்து விடும்.
குரு ஓரை : எல்லாவகை சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம், வியாபாரம், விவசாயம் செய்ய நல்லது. ஆடை ஆபரணப் பொருள்கள் வாங்கவும், வீடு மனை வாங்கவோ,விற்கவோ ஏற்றது.எதுவும் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் புறம்பான காரியமாக இருக்கக்கூடாது. கப்பற்பயணம் செய்வதற்கு இந்த ஓரை சிலாக்கிய்மானது அல்ல. இந்த நேரத்தில் காணாமல் போனபொருள்களைப் பற்றி வெளியில் சொன்னலே போதுத் உடனே கிடைதிதுவிடும்.
சுக்கிர ஓரை : சகல சுப காரியங்களுக்கு வீடு, நிலம், வண்டி வாகனம், ஆடை ஆபரணம் வாங்கவும் மிகவும் ஏற்றது. குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட சகல காரியங்களிலும் நன்மை ஏற்படும். விவசாய்த்திற்கும், பயணங்கள் செய்யும் நல்லது. இந்த ஓரையில் காணாமல் போன பொருள் மேற்கு திசையில் சில நாள்களில் கிடைக்கும்.
சனி ஓரை : எந்தவித சுபகாரிய்ங்களும் செய்யக்கூடாது. புதிதாக எந்த வேலையும் செய்யக்கூடாது. இருப்பினும் நிலபுலங்கள் பற்றி பேசவோ சட்டபூர்வமான விஷயங்களைப்பற்றி முடிவெடுக்கவோ நல்லது.இந்த ஓரையில் காணாமல் போன பொருள் கிடைக்காது.ஒருவேளை இரண்டு மூன்று வருடம் கழித்து எதிர்பாராத விதமாகக் கிடைக்கலாம். |
No comments:
Post a Comment